• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒடிசா பெண்களுக்கு நெருக்கடி தருவதாக பரபரப்பு புகார்

May 12, 2020 தண்டோரா குழு

சோமனூரில் உள்ள கேசிஆர் மில்லில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடி பெண்களை வேலைப்பளுவை திணித்து நெருக்கடி ஏற்படுத்துவதாக ஏஐசிசிடியு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.தாமோதரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள கேசிஆர் டெக்ஸ்டைல் நிறுவனம் செயல்படுகிறது. இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு காலத்திலும் பழங்குடி பெண்களை 16 மணி நேரம் வரைஅனைவரும் பஞ்சாலை குள்ளேயே தங்கவைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஊதியத்தை மில் நிர்வாகம் தர மறுக்கிறது. அவர்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம் என்கிற விருப்பத்தையும் ஏற்க மறுக்கிறது.தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் கேசிஆர் மில்லில் ஆய்வு செய்து நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க