• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஏகல் சன்ஸ்தான் கல்வி மையம் ஆரம்பம்

July 18, 2018 தண்டோரா குழு

வட மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஏகல் சன்ஸ்தான் கல்வி மையம் தற்போது கோவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள இந்திய வர்த்தக சபை அரங்கில் ஏகல் வித்தியாலயா சார்பில் கல்வி மையம் தொடக்க விழாவானது நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய ஏகல் அபியான் நிர்வாக குழுவின் தலைவர் எச்.பங்கரா அவர்கள் கூறுகையில்,

“வடமாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஏகல் சன்ஸ்தான் கல்வி மையம் தற்போது கோவையிலும் தொடங்கப்பட்டுள்ளது.இக்கல்வியானது கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டுள்ளது.இதுவரை 22 மாநிலங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுவதாகவும்,நேபாளத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளதாகவும்,தேசிய அளவில் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும்,அரசு உதவி இல்லாமல் அறக்கட்டளை மூலம் இப்பள்ளிகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்”.

மேலும் படிக்க