• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்

February 13, 2019 தண்டோரா குழு

கோவையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பு சார்பில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் உள்ள எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி இன்று காலை கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

சி.ஐ.ஐ கோவை மண்டல நிர்வாக இயக்குனர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். நேஷனல் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக மேலாளர் ஜி. கண்ணன், மாவட்ட தொழில் நிறுவனங்கள் மைய நிர்வாக மேலாளர் கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், போல் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், காமராஜ் போர்ட், எல்.என்.டி ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்.சி ,எஸ்.டி தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

பொது நிறுவனங்களில் எவ்வாறு பதிவு செய்து தொழில் வாய்ப்புகளை பெறுவது என்பது குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. இறுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் நவநீத சிவகுமார் நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க