• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஊரடங்கிலும் கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானம்

August 30, 2020 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக, மருந்து கடை, பால் விற்பனை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

அனைத்து கட்சியினர் மற்றும் காவல் துறையினரின் உதவியோடு மதுபான கடைகள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டாலும், மது பிரியர்கள் வாங்கிசெல்வது வாடிக்கையாகவே உள்ளது. மது பிரியர்கள் பலர் மதுபான கடை அமைந்துள்ள பாரிலே குடிக்கின்றனர். கொரொனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட உத்திரவு மது பிரியர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

முன்களப்பணியாளர்களை விட அரசு இவர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கின்றதோ? என எண்ணத் தோன்றுகிறது.இந்நிலையில் இன்று கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள மதுபான கடை சட்ட விரோதமாக இயங்கி வருகிறது. வீடியோ எடுப்பவர் முதல் கேள்வி கேட்பவர் வரை என்ன வேண்டும் சொல்லுங்க தருகிறோம் என பணிந்தும், மிரட்டியும் காவல் துறை உதவியோடு செயல்படும் கடையை ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதற்கு அரசு ஊரடங்கு போடாமலே இருந்திருக்கலாம்.

மேலும் படிக்க