March 7, 2019 தண்டோரா குழு
கோவையில் உலக மகளிர்தினத்தை முன்னிட்டு கேரள மற்றும் கோவையை சேர்ந்த பெண்கள் மூவர் உடல் தானம் செய்தனர்.
கோவையில் உலக மகளீர் தினத்தை முன்னிட்டு கோவை குனியமூத்தூர் இடையர்பாளைம் பகுதியை அமுதா ரவிக்குமார், மாதம்பட்டியை சேர்ந்த சாந்தா மற்றும் கேரள மாநிலம் கஞ்சிகோடு பகுதியை சேர்ந்த கலைச்செல்வி ஆகிய மூவரும் உடல் தானம் செய்தனர். கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு உடல் தானம் செய்வது குறித்த பத்திரப்பதிவு சான்றிதழை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் வழங்கினர்.
பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே உடல் தானம் செய்யும் நிலையில், உயிரை பிரியும் உடல் வீணாக மண்ணில் மக்கிப்போவதற்கு பதிலாக இறந்தும் உபயோகமாக இருக்கும் வகையில் பெண்களும் உடல் தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக உடல் தானம் செய்த பெண்கள் கூறுகின்றனர்.