April 2, 2019
கோவையில் உரிய ஆவணம் இல்லாமல் , கொண்டு சென்ற 4.5 டன் கோதுமையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவையை அடுத்த வீர கேரளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த லாரியை அதிகாரிகள் சோதனை நடத்திய போது , லாரியில் கோதுமை கொண்டு வரப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அந்த கோதுமைக்கான உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் , கொண்டு சென்ற 4.5 டன் கோதுமையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.