• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இளைஞர் மீது கார் மோதி விபத்தில் கல்லூரி மாணவி மீது வழக்குப்பதிவு!

February 21, 2019 தண்டோரா குழு

கோவை கொடிசியா சாலையில் கார் ரேஸ் நடத்திய மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு அருகே கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது.இந்த கொடிசியா தொழிற்காட்சியகம் சாலையை சுற்றி மொத்தம் 4க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் 5 கல்லூரிகளும் உள்ளது. அதேபோல நீண்ட சாலையான இந்த சாலையில் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களையும் ,கார்களையும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டிவருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால் இந்த கொடிசியா வளாகத்தின் முன்பகுதியில் உள்ள மூன்று முக்கு சாலையில் தினமும் இரண்டுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்படுகிறது. அதேபோல ஜென்னி கிளப் சாலை துவக்கப்பட்ட இடத்திலிருந்து கொடிசியா வரை இறக்கமான பகுதி என்பதால் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது.

இதற்கிடையில், தஞ்சாவூரை சேர்ந்த பாலாஜி என்பவர் பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள இஸ்கான் கோவில் சாலையில் இருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கொடிசியா சாலையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் ஓன்று இவரது பைக் மீது மோதி தூக்கி எரிந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் மீண்டும் அதிவேகமாக சென்றுவிட்டது.

இதையடுத்து படுகாயமடைந்த பாலாஜியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பாலாஜியின் தந்தை போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த விசாரித்த போலீசார் விபத்தை ஏற்படுத்தியது ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தர்சனா ரூத் அவரது தோழியுடன் கார் ரேஷ் நடத்தியதாகவும், 100 கி.மீ வேகத்தில் வந்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், மாணவி தர்சனா ரூத் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், விபத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க