• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது

March 30, 2019 தண்டோரா குழு

கோவையில் தாயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் கைது செய்ய்பட்டுள்ளார்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், தனது தாயின் சிகிச்சைக்காக,அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகில் கவுதம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பணியிலிருந்த சிறுநீரக சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமலிங்கம் (வயது 65), உடல்நிலை சரியில்லாத தாய்க்கு சிகிச்சை அளிப்பதை விடுத்து மகளின் உடல் பாகங்களை தொட்டு தாய்க்கு இந்த இந்த இடத்தில் தானே வலி உள்ளது என்று கேட்டு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், கோவை மத்திய பகுதியிலுள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க