• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இளம் ஓவியர்களின் கைவண்ணங்களில் உருவான ஆர்டிசி கூட்டு ஓவியக் கண்காட்சி

August 3, 2019 தன்டோரா குழு

கோவையில் இளம் ஓவியர்களின் கைவண்ணங்களில் உருவான ஆர்டிசி கூட்டு ஓவியக் கண்காட்சி துவங்கியுள்ளது.

கோவை ஜென்னி கிளப்பில் Nac நுன்கலை அகாடமி சார்பில் ஆர்டிசி கூட்டு ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இக்கண்காட்சியானது 2.08.2019ம் தேதி முதல் 4.8.2019 வரை நடைபெற உள்ளது. ஓவிய பிரியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன் தொடங்கி வைத்தார். Nac அகாடமியின் நிறுவனர் பரூக் ஷா மேற்பார்வையில் இளம் ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.

அதன்படி நீர் சேமிப்பு, கலாச்சாரம், வனங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்பின் கீழ் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. மேலும் கத்தியால் வரையப்பட்ட ஓவியம் , திரவங்களை கொண்டு வரையப்பட்ட ஓவியம், மணலால் வரையப்பட்ட ஓவியம் என இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் காண்போரை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் விலங்குகளின் தோற்றம், கிராமிய பண்பாட்டை பிரதிபலிக்கும் ஓவியங்கள் என அனைத்து ஓவியங்களும் கண்களை கவர்ந்திலுக்கும் வகையில் இளம் ஓவியர்களால் வரையப்பட்டுருந்தன.

இந்த ஓவிய கண்காட்சியில் 5ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் கூறுகையில், தங்களுக்குள் இருக்கும் ஓவிய ஆற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளதாக கூறினர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஓவியம் குறித்த புரிதலை தங்கள் பெற்றோர்களுக்கும், ஓவியத்தின் சிறப்பை தங்களுக்கும் உணர்த்தும் விதமாக இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் படிக்க