• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த பாதிப்பு 1,071 ஆக உயர்வு

July 10, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று கோவை, காந்திபுரம், 100 அடி ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் 13 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம்,இன்று ஒரே நாளில் 43 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்தது. இதில். 320 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 744 பேர் இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க