August 22, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று 389 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் ஒரே நாளில் 389 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,358 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்,கோவையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 4 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது.அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 312 குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,972 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,151 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.