• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இந்தியாவிலேயே மிக உயரமாக 165 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்

December 20, 2018 தண்டோரா குழு

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்தியாவிலேயே மிக உயரமாக 165 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 165 அடி உயரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது.இதற்கான விழாவை பேராயர் ஜோசப் சுதாகர் துவக்கி வைத்தார். விழாவில் கேரல் எனப்படும் கிறிஸ்துமஸ் கூட்டுப்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டலின் பொது மேலாளர் ராமச்சந்திரன்,

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, 165 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம், இந்தியாவிலேயே மிக உயரமான மரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இதனை 24 மணி நேரத்தில் 24 ஊழியர்களை கொண்டு அமைக்கப்பட்டது.36 அடி அகலத்தில் 165 அடி உயரத்தில் செய்யப்பட்ட இந்த மரத்தில், குடில் ஒன்றும் அமைக்கப்பட்டு 20 வகையான கேக், ரொட்டிகள், குக்கீஸ் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும் மான்கள் பூட்டிய பனிச்சாரட் வண்டி, பரிசுப்பொருட்களுடன் தயார் செய்யப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளாலும், பரிசுகளாலும் அலங்கரிக்கப்பட்ட இதனை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வியந்தனர்.இந்த துவக்க விழாவில் ஓட்டலின் தலைமை சமையல் கலை நிபுணர் சக்தி வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க