• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆவின் பாலகத்தின் கல்லாப்பெட்டியை இளைஞர் திருடிச் சென்ற இளைஞர்

July 17, 2020 தண்டோரா குழு

கோவை ஒண்டிபுதூர் அருகே ஆவின் பாலகத்தின் கல்லாப்பெட்டியை இளைஞர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிபுதூர் திருச்சி சாலையில் 24 மணி நேரம் செயல்படும் ஆவின் பாலகம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று இரவு பணியில் தேவதாஸ் என்ற 70 வயது முதியவர் இருந்துள்ளார்.இந்நிலையில், வாடிக்கையாளர்கள் யாரும் வராததின் காரணமாக சிறிது நேரம் கண் அயர்ந்துள்ளார்‌. அப்போது,அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் முதியவர் அயர்ந்து தூங்குவதைக் கண்டு, கடையின் உள்ளே நுழைந்து கல்லாபெட்டியில் இருந்த 4000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

மறுநாள் காலை பணம் காணாமல் போனது தெரியவர பாலகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட போது, ஹெல்மெட் அணிந்தபடி உள்ளே லாவகமாக வந்து கல்லாப் பெட்டியை எடுத்துச் சென்றது கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.பின்னர் இதுகுறித்து கடையின் உரிமையாளர் கோபால கிருஷ்ணன்,கல்லாப்பெட்டியில் சுமார் 4,000 ரூபாய் வரை இருந்ததாக கூறி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க