May 30, 2020
தண்டோரா குழு
ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை அரிவாளை வெட்டிய வழங்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் வீட்டில் மாநகர் தெற்கு உதவி கமிஷனர் செட்டிரிக் மனுவேல் தலைமையில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர். இவர் மதுக்கரை சாலையில் மரச்செக்கு எண்ணை கம்பனி வைத்து நடந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி கம்பனியில் இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சூர்யபிரகாஷ் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் முகமது அனிபா என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் வீட்டில் மாநகர தெற்கு கமிஷனர் செட்ரிக் மனுவேல் தலைமையில் போத்தனூர் ஆய்வாளர் மகேஷ்வரன் உள்ளிட்ட போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.