• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை

August 5, 2020 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூரில் மழையால்
ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்றிரவு மழை கொட்டித்தீர்த்தது.

இந்நிலையில்,கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த சாடிவயல் பகுதியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இந்நிலையில், சேத மதிப்பு குறித்து ஆய்வறிக்கைக்கு பின்பு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க