October 23, 2019
தண்டோரா குழு
கோவையில் ஆம்புலன்ஸ் மூலம் கடத்திவரப்பட்ட 500 கிலோ கஞ்சாவை என்ஐபி சிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் கஞ்சா எனும் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதாக சில புகார் எழுந்து வந்துள்ளது.இக்கஞ்சாவை ஆந்திராவிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கடத்தி வந்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவலின் படி உடுமலைப்பேட்டை அருகே கோவை என்ஐபி சிஐடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 250 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்ததின் தகவலின்பேரில் கருப்புசாமி என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 250கிலோ கஞ்சா மற்றும் ஆம்புலன்சில் கடத்தி வரப்பட்ட 250கிலோ கஞ்சா என500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கருப்புசாமியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.