• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

December 25, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர் ஜீவானந்தம் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் அடுத்த இஎஸ்ஐ மருத்துவமனை பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் ஜீவானந்தம். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு சொந்தமான இடம் சிங்காநல்லூர் இ எஸ் ஐ மருத்துவமனை எதிரில் உள்ளது. மேலும் இவர் அரசு இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் மற்றும் பெட்டிக்கடை அமைத்துள்ளதாக சூலூர் கலங்கல் பகுதியை பகுதியைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழக மாநில அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த ஜீவானந்தம் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீதும் தனது குடும்பத்தார் மீதும் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.அப்போது அங்கிருந்த பத்திரிக்கை யாளர்கள் அவரை தடுத்து அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஜீவானந்தம் சூலூர் பகுதியை சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பாளர் லோட்டஸ் மணிகண்டன் என்பவர் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் அதனால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். மேலும் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க