June 4, 2019
தண்டோரா குழு
கோவையில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் முஜி இவர் அதிமுக 86 வது டிவிசன் செயலாளராக உள்ளார். இவர் மீது அதேபகுதியில் உள்ள தேசிய லீக் கட்சியை சேர்ந்த பிலால் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூராகவும், அருவெருப்பாகவும் கோவை பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றசம்பவத்தில் முஜியை தொடர்பு படுத்தி வதந்திகளை பதிசெய்து வந்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அதிமுக புறநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்பபிரிவு துணை செயலாளர் ரியோஸ்கான் என்பவர் கோவை குணியமுத்தூர் காவல் நிலையத்தில் பிலால் என்பவர் மீது அவதூறு புகார் செய்துள்ளார். இதனையடுத்து, குணியமுத்தூர் காவல் துறையினர் பிலாலை கைது செய்துள்ளனர்.மேலும் விசாரணையில் சமீபத்தில் கரும்புக்கடை யில் மாநகராட்சி அதிகாரிகளும், நெடுஞ்சாலை துறையினரும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டார்கள். இதில் பிலால் என்பவர் ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களும் இடிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்க்கு பழிவாங்கும் விதமாக அவதூறு பரப்பியதாக ஒப்புக்கொண்டதால் குணியமுத்தூர் காவல்துறையினர். இரண்டு பிரிவுகளின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.