• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

September 23, 2020 தண்டோரா குழு

கோவையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் வைரஸ் தொற்று காலத்தில் உரிய சம்பளம் வழங்கவும், வேலைநீக்கம் புதிய குறைப்பு நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தியும், உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 7500 வீதம் தல 22 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் மசோதா,அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் தங்களது 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க