August 2, 2020
தண்டோரா குழு
கோவை திருச்சி ரோட்டில் அதி வேகமாக வந்த கார் ஸ்கூட்டி வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.பெண் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கினால் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் திருச்சி சாலையில் கார் ஒன்றை இளைஞர் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார்.இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இருவரும்தூக்கி வீசப்பட்டனர்.இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மற்றொருவரை அக்கம்பக்கத்தினர்
மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.