• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் பலி

August 2, 2020 தண்டோரா குழு

கோவை திருச்சி ரோட்டில் அதி வேகமாக வந்த கார் ஸ்கூட்டி வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.பெண் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊரடங்கினால் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் திருச்சி சாலையில் கார் ஒன்றை இளைஞர் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார்.இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இருவரும்தூக்கி வீசப்பட்டனர்.இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மற்றொருவரை அக்கம்பக்கத்தினர்
மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க