• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அதிவிரைவுப்படை வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

July 14, 2020 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அதிவிரைவுப்படை வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.வெள்ளலூர் பகுதியில் அதிவிரைவு படை குடியிருப்பு பகுதியில் சுமார் 1500 மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.

இந்நிலையில்,வேலூர்,விருதுநகர், மகாராஷ்டிரா பகுதிகளுக்கு சென்று வந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மூவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த 9ம் தேதி ஊருக்கு சென்று பணிக்கு திரும்பிய நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க