June 5, 2018 தண்டோரா குழு
உலக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள லெட்ஸ் தேங்க் பவுண்டேஷன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள 297 அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் நடப்பட்டது.
மேலும்,அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்றுகளுடன்,இயற்கை உரங்கள்,பெயர் பலகைகள் வழங்கப்பட்டது.மாணவர்களுக்கு மரங்கள் பற்றிய விழிப்புணர்வும்,சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தவே பள்ளிகளில் மரங்களை நட்டு வைத்து உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.அனைத்து மாணவர்களும் மரங்களை சரிவர பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்களிடம் தெரிவித்தனர்.