• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவிட் 19 தொற்றிலிருந்து எளிதாக குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

October 17, 2021 தண்டோரா குழு

கோவிட் 19 தொற்று மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்பது தான் தற்போதைய நமது கவனம் உள்ளது. பல்வேறு மாநில அரசுகள், ஏற்கனவே உள்ள குழந்தைகள் நல மருத்துவ வசதிகளை உயர்த்தியுள்ளன. குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

முதலாவது தொற்று அலையில் பாதுகாப்பாக இருந்த குழந்தைகள், இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டனர். கோவிட் 19 ல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறிகுறிகள், லேசானது முதல் மிகவும் மோசமானது வரை உள்ளது. இதற்கான அறிகுறிகள், பெரியவர்களுக்கு உள்ளது போன்றே காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ளன. மோசமான நிலை, ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.

இந்தியாவில் தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஊரடங்குகள் நீக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது அலையின்போது, குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு வந்தால், அது அனைவரையும் பாதிக்கிறது. எனவே, பொது இடங்களில் குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இருப்பினும், உடற்பயிற்சியின்போது குழந்தைகள் முக கவசம் அணிவதை தவிர்க்க வேண்டும். மூச்சு விட இது மிகவும் அவசியம். வீட்டில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் உள்ள பரப்புகள் வழக்கமாக கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு சமன்படுத்தப்பட்ட உணவுகளை அளிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகள் போன்றவை அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். எண்ணெய், மசாலா கலந்த சிற்றுண்டிகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். லூபின் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஆயுர்வேத மருந்து, குழந்தைகளின் பசியை மேம்படுத்துவதால், தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு வீட்டில் சமைத்த சத்தான உணவை அளிக்க முடியும். இந்த மருந்தில், சீந்திலை, நெல்லி, திப்பிலி போன்ற மூலிகைககள் உள்ளன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் மந்த்ராலயாவும் இதை சிபாரிசு செய்துள்ளது. இயற்கை பொருட்களடங்கிய, பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட இந்த மருந்து, குழந்தைகளின் நலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.

உணவு முறையுடன், போதுமான உடல் பயிற்சி, போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், தூக்கம் போன்றவைகளையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசி மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக பேணுவது அவசியம்.

லூபின் லிமிடெட்

புதுமையான மருந்துகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் முன்னணியில் உள்ள லூபின் நிறுவனம், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பொது காரணிகளைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக், லடின் அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மருந்து விற்பனையை மேற்கொண்டுள்ளது.

இருதய நோய், சர்க்கரை எதிர்ப்பு மற்றும் நுரையீரல், குடல், மத்திய நரம்பு மண்டலம், மகளிர் நலம் உள்ளிட்டவைகளுக்கு மருந்துகளை தயாரித்து வருகிறது. அமெரிக்காவில் 3வது இடத்தை பெற்றுள்ளது.

மேலும் படிக்க