• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் வரும் 9ம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு

October 26, 2023 தண்டோரா குழு

தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது.தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த 4.50 லட்சம் லாரிகள் கொரோனா தொற்று காலத்திற்கு பின் தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு சுங்க கட்டண அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 2. 50 லட்சம் எண்ணிக்கையான லாரிகள் மட்டும் இயங்குகின்றன.

லாரி தொழிலில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வழியாக 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி உள்ளது.அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் அபராதம் தங்கள் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும் மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்றையும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 9ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க