• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொழும்பிலிருந்து கோவைக்கு வந்த 145 கப்பல் மாலுமிகளுடன் 170 இந்தியர்கள்

June 19, 2020 தண்டோரா குழு

கொழும்பு தூதரகத்தின் ஆணையர் உதவியோடு தாயகம் திரும்பிய 145 கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 170 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

இந்தியா முழுவதும் கொரொனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜீன் 31 ஆம் தேதி வரை அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் சிக்கித்தவித்து வரும் இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் மத்திய அரசு மே 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்க கட்டுப்பாடு களுடன் அனுமதியளித்தது.

இதனைத்தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் 4.5 லட்சம் பேர் இந்தியா திரும்ப மத்திய அரசின் ‘வந்தே பாரதம்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் 2.5 லட்சம் இந்தியர்கள் இன்று வரை நாடு திரும்பியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் கொழும்பிலிருந்து 145 கப்பல் மாலுமிகளுடன் 170 இந்தியர்கள் கோவை விமான நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தனர்.

சென்னையில் தரையிரங்க வேண்டிய விமானம், ஊரடங்கு காரணமாக கோவை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.இந்த விமானத்தில் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறைதிலிருந்த மீனவர், விசா முடிந்து ஸ்ரீலங்காவில் தங்கியிருந்தவர்கள்,சுற்றுலா சென்றவர்கள் என 25 பேரும் தூதரக அதிகாரிகளின் முயற்சியால் நாடு திரும்பினர்.மேலும் பல்வேறு நாடுகளின் கப்பல்களில் மாலுமிகளாக பணியாற்றி ஸ்ரீலங்காவிற்கு வந்து சேர்ந்த 145 பேரும் தனியார் சிறப்பு விமானத்தில் கோவை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.ஆந்திரா, கர்நாடக, அந்தமான்,தமிழ்நாடு,கேரளா,மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த மாலுமிகள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இருக்கின்றனர்.170 பேரும் இந்தியா திரும்ப உதவிய கொழும்பு தூதரக அதிகாரிகள் மற்றும் மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் படிக்க