• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொலை மிரட்டல் வருவதாக உயர்நீதிமன்றத்தில் சகாயம் புகார்

August 8, 2017 தண்டோரா குழு

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் இன்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. விசாரணை குழு ஆவணங்களை ஒப்படைக்க, ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க