• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொசு உற்பத்தி :தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு

December 2, 2021 தண்டோரா குழு

கோவை வடக்கு மண்டலத்தில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்ததாக, தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபோல் சுன்கராவின் உத்தரவுப்படி, மாநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கும் சிமென்ட் மற்றும் நெகிழிப் பொருள்களை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக் கூடியவை என்பதால் நல்ல நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருள்களான டப்பாக்கள், பூச்செடிகள், பெயின்ட் டப்பாக்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 42ஆவது வார்டு, அத்திப்பாளையம் சாலை, ஐயப்பா நகர், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, டெங்கு காய்ச்சல் பரப்ப காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க