• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் மா.ஆறுச்சாமி காலமானார்

March 12, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனரும் தற்போதைய கௌரவத் தலைவருமான முனைவர் மா.ஆறுச்சாமி 12.03.2022 அன்று காலை 10.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது பூதவுடல் அஞ்சலிக்காக 131/82, மேற்கு சம்பந்தம் சாலை, ஆர்.எஸ்.புரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதிச் சடங்கு 13.03.2022 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் அவரது பிறந்த ஊரான வழுக்குப்பாறை ராயகவுண்டனூர் பண்ணை இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இவருடைய காலத்தில் தன்னாட்சிக் கல்லூரி, ஆற்றல்சார் கல்லூரி, சீர்மிகு கல்லூரி முதலிய தகுதிகள் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவால் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் சங்கத்தின் தலைவராகவும் இந்திய அறிவியல் கழகத்தின் கோவை மண்டலப் பொறுப்பாளராகவும் நீண்ட காலம் பணியாற்றி உயர்கல்வித்துறைக்குத் தன் பெரும் பங்கை நல்கியவர் முனைவர் மா.ஆறுச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க