• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கையில் அடிபட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற ஆறு வயது சிறுமி பலி – மருத்துவமனை மீது பெற்றோர் புகார்

January 28, 2021 தண்டோரா குழு

கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற வந்த 6 வயது சிறுமி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம் பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு ஹேமர்னா (6) என்ற மகள் இருந்தார்.கார்த்திகேயேனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த வாரம் குடும்பத்துடன் மைசூருக்கு சிகிச்சை பெற சென்றார். அப்போது தங்கியிருந்த இடத்தில் கதவு இடுக்கில் ஹேமர்னாவின் கைவிரல் சிக்கியது.இதில் கை விரலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் கோவைக்கு திரும்பிய அவர்கள் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் ஹேமர்னாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமர்னா இறந்து விட்டதாக முத்தூஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கார்த்திகேயனிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் கையில் அடிபட்டு வந்த குழந்தை எப்படி இறந்து போகும்? நன்றாகத்தானே இருந்தது என்று கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்தனர்.

மருத்துவமனை நிர்வாகத்தினர் சரியாக பதில் அளிக்காததால் இது குறித்து நேற்று இரவு சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் குழந்தை ஹேமர்னா இறந்துவிட்டதாக புகார் அளித்தனர்.புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மூன்றரை வயது மகள் பிரியதர்ஷினி கையில் ஏற்பட்ட காயத்திற்கு இதே நிர்வாகத்தைச் சேர்ந்த சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏற்கனவே சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சூழலில் மீண்டும் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் கையில் அடிபட்ட காயத்திற்கு வந்த ஆறு வயது சிறுமி இறந்த சம்பவம் கோவை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க