October 28, 2020
தண்டோரா குழு
திடக்கழிவு மேலாண்மையில், எவ்வித பொருளும் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், புதிய ‘மேக் கிரீன் இன்சினரேட்டர்’ உருவாக்கிய மேக் இன்டியா லிமிடெட் நிறுவனம், கெவின்கேர் எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் புதுமைப்படைப்பு விருது 2020’ விருதை வென்றுள்ளது.
இந்த விருது, புதுமையான, தனித்துவமிக்க படைப்பு, அது மக்களுக்கு பயன்படும் விதம், தேவையான அளவிற்கு தயாரிக்கும் அளவு போன்றவை மதிப்பீடு செய்யப்படுகின்றன. தொழில் நிபுணத்துவமிக்க, நியமனம் பெற்ற நடுவர் குழு, போட்டியாளர்களை பட்டியலிட்டு தேர்வு செய்கிறது. தேர்வில் பங்கேற் றோர், புதுமையின் அடிப்படையில், ஆன்லைன் முறையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். அவர்களது தயாரிப்பு, நோக்கம் போன்றவை விளக்கம் பெறப்பட்டு, மீண்டும் தரவரிசை பட்டியல் தயாராகிறது. வெற்றி பெறுவோர், 5 நிமிட ஆன்லைனில் தங்களது தயாரிப்பு, கேள்விகளுக்கான பதில் போன்றவைகளை நடுவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், வகைப்படுத்தப்பட்ட முறைப்படி விருதுகள் அறிவிக்கப்படும்.
தரவரிசைப்படி தேர்வான இரண்டு வகையினரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று, நடுவர்களை சந்திப்பர். இதில், தொழில் நிறுவனத்தின் தலைவரும், முதலீடு செய்தவரும் இடம் பெறுவர். நடுவர் குழுவை கிர்லாஸ் நிறுவனத்தின் தலைவர் அஜய் கிர்லஸ்கர், செயின்ட் கோபியன் தலைவர், கெவின் கேர் தலைவர், ஐஐடி பேராசிரியர்கள் பங்கேற்பர்.
இது குறித்து மேக் இன்டியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் இன்ஜினியர் அத்தப்ப கவுண்டர், தலைமை விஞ்ஞானி டாக்டர் ராமன் சிவக்குமார், ஆகியோர் கூறியதாவது:
கெவின்கேர் எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் புதுமைபடைப்பு விருது 2020″ என்ற போட்டி வருடாவருடம் நடைபெற்று வருகின்றதாகவும், தற்பொது, நடைபெற்ற 9வது பதிப்புக்கான போட்டியில், அகில இந்திய அளவில் பல்வேறு புதிய, புதுமை, கண்டுபிடிப்புகளை காட்சி படுத்தியதாகவும், இதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மைக்கான புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி அதனை காட்சிப்படுத்தியதற்காகவும், அதன் சோதனை முயற்சியில் வெற்றியை கண்டதாலும், மேக் இந்தியா லிமிடெட் சார்பில் காட்சிபடுத்த பட்ட, “மேக் கிரீன் இன்சினரேட்டர்” என்ற இயந்திரத்தை உருவாக்கிய மேக் இந்தியா லிமிடெட் நிறுவனத்திறக்கு, கிர்லாஸ்கர் குழுமத்தின் தலைவர் அஜய் கிர்லாஸ்கர் “சின்னிகிருஷ்ணன் புதுமை படைப்புகான 2020” என்ற விருதை இந்த ஆண்டு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இன்றைய உலகில், மனிதனால் கண்டுபிடிக்க பட்ட பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்ற வேலையில், பிளாஸ்டிக்கை தீயிட்டு அளிப்பதை தவிர வேறுவழியில்லாத நிலையை மாற்றி, இதறக்கு புதிய தீர்வை கண்டு பிடித்து உள்ளதாகவும், இனி பிளாஸ்டிகை இயற்கை உரமாக மாற்றி, அந்த உரத்தில் விவசாயங்களுக்கு பயண்படுத்த முடியும், எனவும், இதிலிருந்து கிடைக்கும் சாம்பலை கொண்டு நடைபாதை கற்களை உருவாக்கியுள்ளதாகவும், இந்த முறையினால் அளிக்க படுகின்ற பிளாஸ்டிக் குப்பை கழிவுகளின் மூலமாக பொதுமக்களுக்கு எந்த வித புகை, பாதிப்பு ஏற்படாது எனவும், இதனை புதிதாக தயாரித்து சாதனை படைத்துள்ளதாக மேக் இந்தியா நிறுவனத்தின் தலைமை இஞ்சினியர் ராமன் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.