January 5, 2021
தண்டோரா குழு
பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பபட்டு வருகிறது.
கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளிலிருந்து 8 மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் ‘எச் 5 என் 8’ வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கு பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தொடர்ந்து வாத்து கோழிகள் உயிரிழந்து வருகின்றன. இதனால் சுற்று வட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துக்களை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல், தமிழகத்துக்குள் வராமல் தடுக்க கோவை வாளையார் சோதனை சாவடியில் கால்நடை துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் ,மேலும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மற்ற வாகனங்களுக்கு குளோரின்-டை-ஆக்ஸைடு தெளிக்கபட்டு வருகின்றனர்.