March 9, 2020
கோவை நவகரை அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தமிழக கேரள எல்லபகுதியான கோவை ஊரக பகுதியான நவகரை, மதுக்கரை ஆகிய இடங்களில் மர்ம நபர்கள் கேரள மருத்து கழிவுகளை கொட்டி செல்வது வழக்கமாக நடைபெறும் சம்பவமாக மாறியுள்ளது. அவ்வப்போது இது போல கழிவுகளை கொட்ட வரும் வாகனங்களை அப்பகுதி மக்களே பிடிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அது போல் இன்றும் நவகரை அருகே கேரளாவில் இருந்து மருத்துவகழிகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்களே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
லாரி ஓட்டுனர் ஆறுச்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .கொரணா வைரஸ் கேரளாவில் ஊடுருவிய நிலையில் இது போல் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க அரசு தரப்பில் குழு ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.