• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதார் எண் இல்லை என்றால் சம்பளம் கிடையாது – கேரள அரசு அதிரடி

July 26, 2017 தண்டோரா குழு

கேரளாவில் அரசு ஊழியர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் சம்பளம் கிடையாது என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கேரளாவில் அரசு ஊழியர்கள் தங்களது ஆதார் எண்ணை வரும் ஜூலை 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்,அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று கேரள தலைமைச் செயலாளர் நளினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு தொடர்பாக சுற்றறிக்கை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த உத்தரவில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது ஆதார், ரே‌ஷன் கார்டு,மற்றும் பான்கார்டு போன்றவற்றின் நகல்களை தாங்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் வருகிற 31ம் தேதிக்குள் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க