• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது

July 7, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து நாள்தோறும் கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் ஏற்றிச் செல்கின்றன. இந்த வாகனங்கள் முழுமையாக கேரளா போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று
சோதனை செய்ததில் ஹவாலா பணம் கடத்த முயன்றது தெரியவந்தது.கேரளாவைச் சார்ந்த அப்துல் சலாம் மற்றும் மிதுன் குஞ்சு என்ற இரண்டு பேர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வாளையார் செக்போஸ்டில் இருந்த பாலக்காடு கேரளா போலீசார் அவர்களை கைதுசெய்து பாலக்காடு நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றனர்.அவர்கள் எங்கிருந்து இந்த பணத்தை கடத்தி வந்தனர். யாருக்கு ஒப்படைக்கின்றனர் வேறென்ன சம்பவங்கள் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும், அவர்களிடம் இருந்து 1.25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க