• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

November 15, 2022 தண்டோரா குழு

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் – 4 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திடமாக வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்த போது அதில் சுமார் 1.5 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ராஜி, ரபியா, ஜோதி, மற்றும் பழனியம்மாள் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க