• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியின் பத்தாம் ஆண்டு நிறுவனர் தினவிழா

November 2, 2019 தண்டோரா குழு

கோவையில் கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியில் பத்தாம் ஆண்டு நிறுவனர் தினவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பத்தாம் ஆண்டு நிறுவனர் தினவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா டைனமிக்ஸ் 2019 கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டது. மழலையர் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்று நடனம் ,நடிப்பு போன்ற பன்முக திறன்களையும் வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிகள் உணர்வை பிரதிபலிக்கும் அரிய விழாவாக அமைந்தது, இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அப்துல்கலாம் பன்னாட்டு நிறுவனத்தின் அறங்காவலர் ஏபிஜே எம் ஜே ஷேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.

பள்ளியின் நிறுவனர் அருள்ரமேஷ் பேசும்போது
,

கடின உழைப்பே வெற்றிக்கு சமம் ,ஒவ்வொரு நாளையும் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் நம்பிக்கையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஒழுக்கம் என்பது வீட்டில் தொடங்கி பள்ளிகளிள் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். குழந்தையின் தனித்துவத்தை வளர்த்து அதற்கான விதைகளை விதைக்கிறது நமது பள்ளி என்றும் கூறினார்.

சிறப்பு நிகழ்ச்சியாக பெண் உரிமையை நடன அசைவுகளால் காட்டிய வசனநாட்டியம், வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவூட்டிப் பெருமைப்படுத்திய நாட்டிய நாடகம் ,தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் நடனம், நெகிழிப் பொருள் பயன்பாட்டை தவிர்த்தலை வலியுறுத்தும் நடனம் போன்றவை பார்ப்போர் மனதில் முத்தாய்ப்பாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் கேம்ஃபோர்டு பள்ளியின் நிறுவனர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் படிக்க