April 9, 2026
தண்டோரா குழு
சமூக நலன் மற்றும் நோய் தடுப்பு சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கேஎம்சிஎச் சூலூர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நேற்று கருமத்தம்பட்டியில் உள்ள ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஒரு விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
காலை 9:30 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்வில் மாணவர்கள்,பேராசிரியர்கள்
மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு இந்த ஆண்டின் உலகளாவிய
சுகாதார முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடினர்.
கேஎம்சிஎச் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி.
பழனிசாமி,பொது நலனில் மருத்துவமனையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தி கூறுகையில்,
தரமான மருத்துவ சேவை என்பது மருத்துவமனை வளாகத்தோடு
நின்றுவிடாமல் அதற்கு அப்பாலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதை உலக சுகாதார தினம் நினைவூட்டுகிறது என்றார்.
கேஎம்சிஎச் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கையெழுத்து இயக்கத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். உறுதிமொழிச் சுவரில் கையெழுத்திட்ட அவர், பொது சுகாதாரத்தைப் பேணுவதில் தனிநபரின் பொறுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கான தூதுவர்களாக இளைஞர்கள் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கேஎம்சிஎச் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் மனோஜ்,அதிகரித்து வரும் வாழ்க்கை
முறை நோய்கள் மற்றும் அவற்றைக் கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து
உரையாற்றினார். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, சிறந்த வாழ்க்கை முறை தேர்வுகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.