April 20, 2018 தண்டோரா குழு
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்க தோ்தல்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தொடா்ந்து கூட்டுறவு சங்க தோ்தல் நடத்த தடை விதித்து உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில் தடையை நீக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.இந்த விசாரணையில் உயா்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனா்.மேலும்,தொடா்ந்து கூட்டுறவு சங்க தோ்தல்களை நடத்தலாம்.ஆனால்,தோ்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.