• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூடங்குளம் அனு உலையை உடனடியாக மூடக்கோரி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

November 1, 2019 தண்டோரா குழு

கூடங்குளம் அனு உலையை உடனடியாக மூடக்கோரி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை நீதிமன்றம் வளாகத்திற்கு வெளியே சமூக நீதி வழக்கறிஞர்கள் மையத்தின் சார்பாக சைபர் தாக்குதலுக்கான கூடங்குளம் அனு உலை, நியூட்ரினோ, மீத்தேன் உலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி 20க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேலும் மாநில, மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பட்டது.கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன் எடுக்கும் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜிதை மீட்க முடியாத அரசால், சைபர் தாக்குதலுக்கு கூடங்குளம் தாக்கப்பாட்டால் அதை எப்படி எதிர்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க