• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் : கோவையில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

June 12, 2017 தண்டோரா குழு

குழந்தை தொழில்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

தேசித குழந்தை தொழிலாளர் திட்டத்தின், மாவட்ட தொழிலாளர் துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 14 வயதிற்கு கீழ் குழந்தைகளை எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன், 18 வயதிற்கு கீழ் உள்ள வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தமாட்டேன் என்ற வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ள பலகை வைக்கப்பட்டிருந்தது.

அதில் கையெழுத்திட மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். குழந்தை தொழிலாளர் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாள் முழுவதும் வைக்கப்பட்டுள்ள இந்த பலகையில் யார் வேண்டுமானாலும் கையெழுத்து இடலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர் முறை, அதை ஒழிப்பது அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க