October 28, 2019
தண்டோரா குழு
குழந்தை சுர்ஜித்தை பற்றி முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு நான்காவது நாளாக 77 மணி நேரத்தை கடந்து முயற்சி எடுத்து வருகிறது.
இரண்டு வயது குழந்தை சுஜித் மீட்பதற்கான முழு முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில்,
’வீரமிக்க சிறுவன் சுர்ஜித் வில்சனுடன் எனது பிரார்த்தனைகள் இணைந்துள்ளது. அவனை ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். சிறுவனை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்துள்ளார்.