• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையால் நோய் பரவும் அபாயம் – அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு

October 22, 2019

கோவை பாப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் 2000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள குளக்கரையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குப்பையை பிரித்தெடுக்கும் சமூக கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது ஆக்கூடம் செயல்படாத நிலையில் அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குள க்கரைப்பகுதியில் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்டப்பட்டு வருகின்றனர். இறைச்சிகளை சாப்பிட வரும் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறைச்சியை கடித்து கொண்டு வீட்டின் முன் போடுவதால் மனிதனுக்கு வைரஸ் நோய் பரவுவது மட்டுமல்லாமல் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக காற்றில் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குளத்தில் உள்ள நீரில் கொசுக்கள் அதிகம் உருவாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மாவட்டம் முழுவதும் ஏற்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் பலர் நோய் வாயின்றி கிடக்கும் நிலையில் நோய் பரவும் அச்சமும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி இந்த பகுதியில் கிரீமி நாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். மேலும் குளத்திலும் வாய்க்காலில் குப்பை கொட்டுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க