October 14, 2019
தண்டோரா குழு
சாலையில் குப்பைகள் தேங்கி கிடக்கும் நிலையில் தன்னார்வம் கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர் குப்பைத்தொட்டி வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
சாலை ஓரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் செல்லும் வழியிலேயே குப்பைகளை ஆங்காங்கே வீசி செய்வதால் துர்நாற்றமும், கொசுக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று லிங்கனூர் வீதியில் குடியிருக்கும் மாற்றுத்திறனாளி ஒருவர் அப்பகுதியில் குப்பை தொட்டி இதுவரை வைக்கப்படவில்லை. மேலும் மக்கள் அதிகமாக நடந்துச் செல்லும் பாதையிலேயே குப்பைகளை வீசி செல்கிறார்கள் இதனால் காற்றில் பறந்து நான்கு புறமாக செல்வதால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக அப்பகுதியில் மாநகராட்சி மூலமாக குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.