• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குப்பைகளை சாலையில் எறிந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

October 21, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 44வது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி, சிந்தாமணி நகர், 3வது கிராஸ் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் கோவை மாநகராட்சி துணைவிதிகள் படி, வீட்டுக் கழிவுகளை அதாவது மக்கும் குப்பை, மக்காத குப்பை, சானிட்டரி குப்பை மற்றும் அபாயகரமான குப்பை என தரம் பிரிக்காமல் தொடர்ந்து சாலையில் தூக்கி எறிந்து சுற்றுச்சூழலுக்கும்,பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவித்ததற்காக ரூ.10 ஆயிரம் சிந்தாமணி நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு அபராதம் விதித்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். இதனை அடுத்து அவரிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க