• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குன்னூர் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையை நவீனபடுத்த 5 லட்சம் நிதி மக்களைவை உறுப்பினர் தகவல்

June 2, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஊட்டியில் இருந்து கேத்தி வரையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

பிற்பகல் 2.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. துவக்க விழாவில், தெற்கு கோட்ட துணை மேலாளர் சந்தரபால் கொடியசைத்து துவக்கி வைத்தார். கேத்தி சென்றடைந்த மலை ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகளை மக்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து,பத்திரிகையாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன்,
நீலகிரியில் மலை ரயில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதைப்போன்ற மலை ரயில் பயணம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதனை கருத்திற்கொண்டு குன்னூர் மலைரயில் நிலையத்தை நவீன படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறையை நவீனபடுத்தும் வகையில் 5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க