June 15, 2018 தண்டோரா குழு
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசுப்பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து கிளம்பியது.
இதற்கிடையில்,பேருந்து மந்தடாபேரின் பவிலாஸ் பகுதியில் செல்லும் போது பள்ளம் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர் ராஜ்குமார்,வலதுபுறமாக பேருந்தை திருப்பியுள்ளார்.அப்போது,எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த கோர விபத்தில் பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்து உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,விபத்தில் அடிபட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேருந்து நடத்துநர் பிரகாஷ் சிகிச்சை பலனின்று இன்று உயரிழந்துள்ளார்.
இதனையடுத்து,பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,29 பேர் பலத்த காயத்தோடு தீவிர சிசிக்கை பெற்று வருகின்றனர்.