• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குன்னூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கோவை மாவட்ட அதிமுக., எம்எல்ஏ.,க்கள் அஞ்சலி

December 11, 2021 தண்டோரா குழு

குன்னூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கோவை மாவட்ட அதிமுக., எம்எல்ஏ.,க்கள் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரியில் கடந்த 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.முப்படை தளபதி உட்பட ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கோவை மாநகர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொரடாவுமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக., எம்எல்ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், வி.பி, கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க