May 25, 2019
தண்டோரா குழு
குடியரசுத் தலைவரை இரவு 8 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோரவுள்ளார்.
17 வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு நாடு முழுவதும் எண்ணப்பட்டது. இதில் நாடு முழுவதும் பாஜக கூட்டணி 353 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களையும் மற்றவை 97 இடங்களையும் கைபற்றியது. மோடி தனிப்பெரும்பான்மையும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று இரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோரவுள்ளார்.