• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசுத்தலைவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

June 7, 2018 தண்டோரா குழு

குடியரசுத்தலைவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காத பிரம்மா கோவில் அர்ச்சகரை கைது செய்யக்கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்திலுள்ள புஸ்கரிலுள்ள பிரம்மா கோவிலை தரிசிப்பதற்காக குடியரசு தலைவர் தனது மனைவியுடன் சென்றார்.அங்கே ஜாதியை காட்டி குடியரசுத்தலைவரை நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்கவில்லை.இதனால் அவர் கோவிலுக்கு வெளியே கற்பூரம் பற்ற வைத்து சாமி கும்பிட்டு சென்றுள்ளார்.இச்சம்பவம் தேசத்திற்கே அவமானம் எனக்கூறி திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாடத்தில் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் அர்ச்சகரை கைது செய்ய வலியுறுத்தியும்,அர்ச்சகர் உரிமை சட்டத்தை கொண்டுவர வேண்டியும் கண்டன கோசங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க