February 23, 2019
தண்டோரா குழு
கோவையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டி வீதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் வசிக்கும் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் போராட்ட இடத்திற்கு வந்த போது பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். அப்போது அம்மன் அர்ஜூனன் பொது மக்களிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்கு வாதம் அதிகரிக்கரிக்கவே கோபத்தின் உச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ பொது மக்களிடம் கடுமையாக பேசவே பதட்டம் அதிகரித்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த முன்னாள் தெற்கு மண்டலத்தலைவர் நாச்சிமுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியதை அடுத்து, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தண்ணீர் கேட்டு போராடிய மக்களிடம், நீ வாடகை வீட்டில் தான் இருக்கிறீர்கள் , உனக்கு வீடு கிடைக்காது என ஒரு பெண்ணிடம், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜீனன் பேசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.